இனிமேல் எந்தவொரு ராஜபக்க்ஷவும் பதவி விலகப் போவதில்லை: சஷீந்திர ராஜபக்க்ஷ

கொழும்பு, ஜுன் 13

இனிமேல் எந்தவொரு ராஜபக்க்ஷவும் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினருமான சஷீந்திர ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி  என்ற வகையில், பதவி விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். மற்றுமொரு ராஜபக்க்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *