அனைவருக்கும் முன்னுதாரணமானார் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன்!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தனக்கு வழங்கபட்ட சம்பள நிலுவைத் தொகையை இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான ஊதியத்தை 2022 ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு கடந்த வாரம் ஒப்புக்கொண்டது.

அதன்படி அவருக்கு 2.67 மில்லியன் ரூபாவை நிலுவைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சம்பள நிலுவைகளில் அடிப்படை சம்பளம். இடைக்கால கொடுப்பனவு. வாழ்க்கைச் செலவு மற்றும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட கட்டாய விடுப்புக் காலத்திற்கான ஓய்வூதியத்திற்குப் பதிலாக கொடுப்பனவு ஆகியவை அடங்கும்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் சிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

டாக்டர் சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிஹாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) 2019 ஜூலை மாதம் குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

பின்னர் குருநாகல் பிரதான நீதவான் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *