ஜனாதிபதிக்கு சாதகமாக காணப்படும் 21 ஆவது திருத்தம்?

கொழும்பு,ஜுன் 13

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு சாதகமாகவே காணப்படுவதாகவும், அவருக்கு பாதகமான நிலை காணப்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினரின் ஆதரவு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்துக்கு காணப்படுவதாக தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவளிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்துக்கு ஆளுந்தரப்பு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதும், குறித்த வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாரிய எதிர்ப்புகள் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த சந்தர்ப்பத்தில் இறுதி நேரத்திலேயே வரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் காரணமாக அது குறித்து ஆராய்வதற்கு மேலதிக நேரம் தேவை என அமைச்சர்கள் கோரியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த வரைபு அமைச்சரவையில் இன்று கலந்துரையாடப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *