யாழ்.மாவட்ட வீரர்கள் முதன்முறையாக வெற்றி

யாழ்ப்பாணம்,ஜுன் 13

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட எஸ்ரிஆர் கூல் ரெனிஸ்(STR Cool Tennis) 10 வயதிற்குட்பட்ட தனிப்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன்முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

ஆனி மாதம் 10,11,12 ஆம் திகதிகளில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன.இதில் 8 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜெ.நர்ஸ்வின் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

7 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ரா.ஆரோன் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

7 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி வி.அஸ்விதா இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *