வான் மூலம் வீதியில் சென்றவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்: சாரதிக்கு ஆயுள் தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொரென்டோவில் வான் மூலம் வீதியில் சென்றவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 29 வயதான குறித்த நபர் மீது 10 பேரைக் கொலை செய்ததாகவும், 16 பேரைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது, குறித்த நபருக்கு 25 ஆண்டுகள் பரோல் கிடைக்காத வகையில் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நடைபாதையில் வானை செலுத்திய சம்பவத்தில் ல் எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *