ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து மட்டக்களப்பில் செயலமர்வு!

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கையில் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வொன்ற நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட அறிக்கை தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மன்றேசா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த செயலமர்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடபெற்ற இந்நிகழ்வில் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ஸிரீன் சரூர் மற்றும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புகாரி முகமட் ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *