150 அடியுடைய மரம் சரிந்து விழுந்தத்தில் சிதறிய குடும்பம்!

காலி – உடுகம பிரதான வீதியின் கொட்டாவ பிரதேசத்தில் பயணித்த முச்சக்கர வண்டி மீது மரத்தின் கிளை ஒன்று வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகன்களாவர். தாயும் ஒரு மகனும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் ஹினிதும பிரதேசத்தில் வசிப்பவர்கள். தந்தை 58, தாய் 56 வயதுடையவர்கள். மகன்கள் 30 மற்றும் 26 வயதுடையவர்கள்.

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தந்தை, வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், குடும்பத்தினர் முச்சக்ர வண்டியில் சென்று தந்தையை அழைத்து வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றது.

பல்கலைகழக மாணவனான மகனே முச்சக்கரவண்டியை செலுத்தி வந்துள்ளார்.

150 அடி உயர மரமொன்று மற்றுமொரு மரத்தின் மீது வீழ்ந்துள்ளதாகவும், அங்கிருந்த முச்சக்கர வண்டியின் மீது மரக்கிளை விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களை பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *