சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

கொழும்பு,ஜுன் 14

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை உருவாக்குவதற்காக குறித்த சட்ட மூலத்தை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் வருடாந்தம் 120 மில்லியன் ரூபாவை விட அதிக வருமானத்தை ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு 2 தசம் 5 வீதம் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியாக விதிக்கப்படவுள்ளது.

இதற்கான சட்ட மூலத்திற்கு சட்ட மா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *