செவெரோடோனெட்ஸ்கில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கான அனைத்து பாதைகளையும் அழித்தது ரஷ்யா

உக்ரேனின் செவெரோடோனெட்ஸ்கில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வழிகளையும் ரஷ்யப் படைகள் முடக்கியுள்ளன.

ஆற்றின் மறுபுறத்தில் உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள நகரத்துடன் இணைக்கும் கடைசி பாலத்தையும் அழித்துள்ளதாக உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் செவரோடோனெட்ஸ்கில் இன்னும் பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் மனிதாபிமான பொருட்களை வழங்குவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது குறித்த பகுதியின் சுமார் 70 சதவிகிதம் ரஷ்யப் படைகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் உக்ரேனிய அதிகாரி கூறினார்.

இதேவேளை ஹைடாய் நகரில் உக்ரேனிய வீரர்களின் நிலைமை கடினமானது என்றும் ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *