<!–
இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டின் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைச்சகம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


