2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று இவ்விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பையும் வாக்கெடுப்பையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply