பிரதமரிடம் ஐவரடங்கிய குழு அறிக்கை கையளிப்பு!

மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை இன்று முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபகஸவிடம் கையளிக்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரின் ஆலோசனைக்கமைய இந்த ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவின் தலைமையிலான இக்குழுவின் உறுப்பினர்களாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நிலூஷh பாலசூரிய, பிரதமர் அலுவலகத்தின் சிரேஸ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணாயக்கார, தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் எட்வட் பீரிஸ் மற்றும் அத்திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மதுஷhனி வர்ணசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மத்திய கலாசார நிதியம் தொடர்பில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது முழுமையாக மறுசீரமைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கு அமைய பயணித்து பிரதமர் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இக்குழுவை நியமித்திருந்தார்.

அதற்கமைய, மத்திய கலாசார நிதியம் தொடர்பில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டனர்.

இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் மத்திய கலாசார நிதியத்தை அதன் நோக்கங்களை அடையக் கூடிய செயற்திறன் மிக்க நிறுவனமாக மாற்ற முடியும் என பிரதமர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இதுவரை எவரது கண்களுக்கும் தென்படாத தொல்பொருள் தளங்கள் நாட்டில் காணப்படுகின்றன என்பது தனது நம்பிக்கை என தெரிவித்த பிரதமர், அவை தொடர்பில் ஆராய்ந்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சகல தொல்பொருள் தளங்களையும் பார்வையிடுவதற்கு இணையவழி ஊடாக ஒரு நுழைவுச்சீட்டை விநியோகிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

இது தொடர்பில் சுற்றுலா சபையுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானமொன்றை எட்டுமாறும் தெரிவித்தார்.
இதில், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply