இலங்கை பொலிஸ் வரலாற்றில் 225 பொலிஸாருக்கு பதவி உயர்வு

225 சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

அதன்படி, 2014 ஆம் ஆண்டு தரமுயர்வை எதிர்பார்த்திருந்த குறித்த சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர்களை உடனடியாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை பொலிஸ் வரலாற்றில், இவ்வாறு பெருந்தொகையானோர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாகத் தரமுயர்த்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், இந்தத் தரமுயர்வினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply