ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயார்!

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று அநுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள வரவு, செலவுத் திட்டம் ஊடாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply