குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு – கிளிநொச்சி

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் ஒன்று , இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

நீராடச் சென்ற 19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *