கொழும்பில் சைக்கிள் வாங்க கடைகளில் அலைமோதும் மக்கள்! (படங்கள் இணைப்பு)

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சைக்கிள் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலுள்ள துவிச்சக்கர வண்டிக் கடைகள் காலையில் திறக்கும் வரை மக்கள் காத்திருப்பதால் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிகரித்த கேள்வியினால் துவிச்சக்கர வண்டிகளின் விலையும் அதிகரித்து துவிச்சக்கர வண்டிகளின் விலை 50,000 ரூபாவை தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *