
கடந்த மாதம் இரண்டு இலகு ரக மற்றும் சிறிய வடிவமைப்பைக் கொண்ட செயற்கைக் கோள்களை இந்தியாவின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவியுள்ள நிலையில் இஸ்ரோ மீண்டும் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் GSLV Mk3 என்னும் செயற்கை கோளினையும், தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் PSLV என்னும் செயற்கைக் கோளினையும் விண்ணக்கு அனுப்பும் செயற்திட்டம் தற்போது நடைபெற்று வருவதாக இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சோமநாத் தெரிவித்திருக்கின்றார்.
இதன்படி விண்ணுக்கு னுப்பப்படவுள்ள இரண்டு செயற்கைக் கோள்களும் ஏற்கனவே அனுப்பப்பட்டவைகளை விட வடிவமைப்பிலும், நிறையிலும் அதிக வலுவை கொண்டிருக்கும் என்பதுடன் இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி என்பவற்றில் பாரிய பங்குளை வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு வருட காலப் பகுதிக்குள் இந்தியா நான்கு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இவ்வாறு நான்கு செயற்கைக் கோள்களை அனுப்புவது இந்தியாவின் அதிவேக வளர்ச்சியை காட்டுவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.