மிரிஹானை சம்பவத்தில் பேருந்துக்கு தீ மூட்டியவருக்கு விளக்கமறியல்

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பேருந்தொன்றுக்கு தீ மூட்டிய சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பேருந்தொன்றுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான குறித்த நபர் தெரணியகலை பகுதியைச் சேர்ந்தவராவார்.

அவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும், விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *