இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பெருமளவானோர் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் சில பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மாட்டு வண்டியில் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மெதகமவில் உள்ள பாடசாலை மாணவர்கள் இவ்வாறு வண்டியில் பாடசாலைக்கு செல்செல்கின்றனர்.