லண்டனில் வசிக்கும் சமூக சேவையாளரான கந்தப்பிள்ளை திலீபன், வடக்கில் வறுமையால் பீடிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றார்.
இந்தநிலையில் அவரது பிறந்த நாளையொட்டி அவரை கௌரவிக்கும் முகமாக அராலி மத்தி பகுதியில் உள்ளவர்களுக்கு நேற்றைய தினம் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அராலி மத்தி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.


