மீண்டும் ஆரம்பமாகும் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள்

கொழும்பு, ஜுலை 02

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு அதன் வழமையான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைகள் வாராந்தம் 3 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூதரக சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்திற்கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, தூதுரக விவகாரங்கள் பிரிவு எதிர்வரும் 04ஆம் திகதி திகதி தொடக்கம், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் இந்த ஏற்பாடுகளைப் பின்பற்றும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *