ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

கொழும்பு, ஜுலை 02

நாட்டின் நடுத்தர மற்றும் சிறிய 200 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலையை அடைந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. தற்போது காணப்படும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் விநியோகத் தடை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

பாரியளவிலான ஆடைத்தொழிற்சாலைகள் சில , சிபெட்கொ மற்றும் ஐஓசி நிறுவனங்களுக்கு  டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக் கொண்ட போதிலும் மேலும் சில நிறுவனங்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்சாலைகள் சங்கத்தின்  உப தலைவர் பீலிக்ஸ் பெர்ணாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.,

எரிபொருள் நிலையங்களூடாக டீசலை பெற்றுக் கொள்வதில் சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலைகள் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்,

பாரியளவிலான ஆடைத்தொழிற்சாலைகள் தமக்கு கிடைக்கும் ஒப்பந்தங்களில் சிலவற்றை சிறிய மற்றும் நடுத்தர ஆடைத்தொழிற்சாலைகளுக்கே வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *