
கொழும்பு, ஜுலை 02
நாட்டின் 07 மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலைகளை போதியளவு எரிபொருள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறாத பட்சத்தில் மூட வேண்டிய நிலை ஏற்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்,
நாடளாவிய ரீதியில் 264 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் அங்கத்துவம் பெறாத 250க்கு மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் காணப்படுகின்றன,
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நிதி செலுத்தப்பட்ட போதிலும் இதுவரை தேயிலை தொழிற்சாலை பல எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேயிலை தொழிற்துறை குறித்து கரிசனையற்று செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்
எரிபொருள் இன்மையினால் தேயிலைக் கொழுந்துகளை கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,