பந்த்- ஜடேஜா சிறப்பான இணைப்பாட்டம்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது ஆட்டநேர முடிவில், ரவீந்திர ஜடேஜா 83 ஓட்டங்களுடனும் மொஹமட் ஷமி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர்.

பர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் மெட்டி போட்ஸ் 2 விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 3 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று இந்தியா அணி தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *