இயக்கச்சி எரிபொருள் நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இயக்கச்சி எரிபொருள் நிரப்புநிலையத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

கரவெட்டி, கட்டைவேலியைச்சேர்ந்த அனுரா அனுஷாந் (34 ) என்பவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த வேளை படிக்கட்டில் ஏறும் போது தவறி விழுந்தார்

தலையில் பலத்த அடி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்

பிற செய்திகள்

Leave a Reply