பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (01) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 32 கிராம் 68 மில்லிகிராம் கேரள கஞ்சா சுருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராஜகிரியவில் உள்ள கல்லூரியொன்றுக்கு அருகில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக, சந்தேகநபர் இந்த கஞ்சா சுருள்களை தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
50 வயதுடைய நபரே இவ்வாறு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள், சந்தேக நபரை வெலிக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பிற செய்திகள்