
பொருளாதார நெருக்கடியில் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாட பிரச்சனைகள் தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை சமர்ப்பிப்பதற்காக இன்றைய தினம் கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கமைப்பாளர் நிஷாந்தன் சமூகம் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்தார் .
அவர் மேலும் குறிப்பிடுகையில் ;
யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 .00 மணியாளாவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தோம் .
பொருளாதார நெருக்கடியில் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாட பிரச்சனைகள் தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை சமர்ப்பிப்பதற்காக இந்த கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.
மக்கள் பெற்றோல் .டீசலுக்காக வெய்யிலில் பாரிய நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றதால் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் . இந்த நெருக்கடிக்கு சிறந்த பொறிமுறையினை உருவாக்க வேண்டும் .
பதுக்கல் மற்றும் கொள்ளை இலாபத்திலிருந்து மக்களை விடுவிக்க , கட்டுப்பாட்டு விலைகளைக் கொண்டுவந்து இறுக்கமாகச் செயல்படுத்த வேண்டும் .
மருந்து , மருத்துவப் பொருட்கள் மீதான விலையை கட்டுப் படுத்த துரித நடவடிக்கை எடுத்தல் மற்றும் மாவட்ட அரச பொது மருத்துவமனைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
. விவசாயம் , கடற்தொழில் , சுகாதாரத்துறை புரிபவர்களுக்கான எரிபொருளை தடையில்லாமல் இலகுவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பசி , பட்டினிச் சாவினைத் தவிர்க்க வீட்டுத் தோட்டம் , சமூகத் தோட்டங்களை உருவாக்க அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் உடனே சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும் என்றார் .
பிற செய்திகள்