பாடசாலைகளை திறக்க ஆசிரியர்களின் ஆதரவு அவசியம்! – மஹிந்தானந்த

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தானும் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனாத் தொற்று காரணமாக மாணவர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கல்வியை இழந்துள்ளனர்.

ஆகவே, அவர்களுக்காக மீண்டும் கல்வி நடவடிக்கையை தொடங்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply