
குடமுருட்டி குளத்தின் கீழ் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் யூரியா உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுபோகத்தை ஆரம்பித்த நிலையில் தற்போது தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குடமுருட்டி குளத்தின் கீழ் 336 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடை ஆரம்பித்த நிலையில் கடந்தகாலபோகத்தை விட விளைச்சல் குறைந்துள்ளதாகவும் தமக்கு எந்த வகையிலும் இலாபம் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்வதற்கு 25,000 ரூபாய் செலவாகிறது . ஒரு ஏக்கருக்கு 35 மூடைகள் பெறும் நிலத்தில் 22 மூடைகளும் சில வயல் நிலங்களில் அதுவும் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்