கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் நடவடிக்கைகள் திடீரென செயலிழந்ததன் காரணமாக கொலன்னாவ நகரசபை பகுதி உட்பட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, நாவல வீதி மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்