
கொழும்பு,ஜுலை 03
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், இன்றைய தினம் 100 மில்லிமீற்றக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி. சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியாக, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும், மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச் சரிவுகளிலும், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக் கூடும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் கொட்டபொல பிரதேசத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.