திருகோணமலை சமூக ஆர்வலர்களின் உயரிய சேவை

திருகோணமலை பகுதியில் உள்ள வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான சமைத்த ஒரு நேர மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த உணவுகளை vebinan Guys for life கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (03) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோணேசபுரி, மனையாவெளி போன்ற கிராமங்களை சேர்ந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்டன.

இதில் சுமார் 380 உணவு பொதிகளை வழங்கினர். ஒரு மாதத்துக்கு இரு தடவையாவது இவ்வாறான மதிய உணவினை சமைத்து வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கழகத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறானவற்றுக்கு ஏனையோரும் உதவ விரும்பினால் அரிசி மரக்கறி வகைகளை வழங்கியும் உதவலாம் என தனவந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக சமூகத்துக்காக இவ்வாறான சேவைகள் இடம் பெறுவதாகவும் ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் இணைந்தும் இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *