நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு நிர்வாக சேவைகள் சங்கம் கோரிக்கை!

தேசிய அனர்த்த நிலையைப் பிரகடனப்படுத்தி, அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கும் முறையான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கும் உரிய அதிகாரியொருவரை நியமிப்பது அவசரத் தேவை என பொது நிர்வாக சேவைகள் சங்கம் வலியுறுத்துகிறது.

வழமையான நிலைமைகளின் கீழ், நாட்டில் இந்த நிலைமையை நிர்வகிக்க முடியாது என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அத்தியவசிய சேவைகளைப் பேணுவதற்கு உயிரைப் பணயம் வைத்து தலையிடும் அரச உத்தியோகத்தர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறியமைக்கு சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், தொழிற்சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு சென்ற போது, ​​சுகாதார ஊழியர்கள் குழுவினால் அவருக்கு அசௌகரியம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரையில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. ஜூன் 23ஆம் திகதி வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளரின் அறிவிப்பின்படி,

இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தாவிடின் தொழிற்சங்கங்கள் கடும் நடவடிக்கை எடுக்கும் என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நீர் விநியோகம் அத்தியாவசிய சேவையாக கருதப்படாமையால் தமது ஊழியர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும் எரிபொருள் பற்றாக்குறையால் கடமைக்கு சமூகமளிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *