ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விநியோகம் விஸ்தரிப்பு

கொழும்பு, ஜுலை 04

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை மேலும் விஸ்தரித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் ஒருமில்லியன் லீட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் திருகோணமலை முனையத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொழும்புக்கு தேவையான எரிபொருளை கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் எம்.ஆர் டபிள்யு சொய்ஷாவினால் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு மேலதிக தாங்கி ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனோஜ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *