
யாழ், ஜுலை 04
தங்களுக்கான எரிபொருளை வழங்கும் வரையில் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது உரிய பொறிமுறையினைப் பின்பற்றி எரிபொருள் விநியோகத்தினை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.