நாட்டில் இன்று 2000 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன – கெமுனு விஜேரத்ன

<!–

நாட்டில் இன்று 2000 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன – கெமுனு விஜேரத்ன – Athavan News

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பல பேருந்துகளுக்கு நேற்றையதினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றையதினம் போதுமான அளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் 3 நாட்களுக்கு தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தது 25 சதவீத பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *