மாகம்மன தீ விபத்து; உயிருக்காக போராடிய சிறுமியும் மரணம் 

ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி இரவு இரண்டு மாடி வீடொன்றில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார்.

பொரளை லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி நேற்று (03) உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம மாகம்மன பகுதியைச் சேர்ந்த ரிதுஷி ரணசிங்க என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த சிறுமியின் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் அறைக்குள் இருந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தந்தை அனுமதிக்கப்பட்ட அதே நாளில் உயிரிழந்ததோடு, தாய் மறுநாள் மரணித்துள்ளார்.

மேலும் சிறுமியின் மூத்த சகோதரி சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 6 வயது மகள் பொரளை லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன் நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *