ஊடகவியலாளர்களுக்கும் எரிபொருளை வழங்க வேண்டும்

ஹட்டன், ஜுலை 04

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருதி ஊடகவியலாளர்களுக்கும் எரிபொருளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம் தியாகு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஹட்டனில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், ஊடகவியலாளர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டில் அநேகமான சேவைகளை இன்று அரசாங்கம் அத்தியாவசிய தேவைகளாக கருதுகின்றது.

எனினும், ஊடகத்துறையை அத்தியாவசிய தேவையாக கருதவில்லையா? என்ற கேள்வி எழுவதாகவும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம் தியாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *