
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவிக்கையில்:
நாட்டில் போக்குவரத்து சேவைகள் குறைத்துக்கொண்டு செல்கின்றன.எரிபொருள் பற்றாக்குறை மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் இன்மையே இதற்கு காரணமாகும்.பாடசாலை சேவை மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக நாம் சாரதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.முதல் கட்டமாக கொழும்பில் 100 பெண் சாரதிகளை இணைத்துக்கொள்ளவுள்ளோம்.அதன் பின்னர் காலி,மாத்தறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேரூந்து சேவைகளை முன்னெடுவுள்ளோம் என்றார்.
பிற செய்திகள்