ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதியான செயற்பாடு!

மட்டக்களப்பு நகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்பிணித் தாய்மார்கள் மற்றும் கடுமையான நோயாளர்களுக்கும் துரித கதியில் பெற்றோல் வழங்கப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எம்.செல்வராசா தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றபோதிலும் மட்டக்களப்பு லங்கா ஐஓசீ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எவ்வித தடைகளுமின்றி எரிபொருள் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகின்றது.

இராணுவத்தினர் பொலிசார் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய அதிபர் எம்.செல்வராசாவின் வழிநடாத்தலில் மிகவும் நேர்த்தியாக திங்க்கிழமை காலை முதல் பெற்றோல் விநியோகம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *