
நிக்கவரெட்டிய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்குள் வைத்து யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த யுவதியைக் காப்பாற்ற முயற்சித்த பஸ் நடத்துனர் மீது இருவர் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன தொடர்புடைய இருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்
இதேவேளை, சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி நிகவெரட்டிய இ.போ. ச பஸ் ஊழியர்கள் இன்று பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பல அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிற செய்திகள்