நாட்டின் அதிகாரங்கள் இப்போது இராணுவத்திடம்! சுரேஷ் ஆதங்கம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை மோசமாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு விடயங்கள் கைமீறிப் போய்விட்டன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அவர்கள் இப்போது மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். காலால் எட்டி உதையும் அளவுக்கு போய்விட்டது.

இது மிகவும் மோசமான செயல். ஒட்டுமொத்த நாட்டையும் இராணுவ ஆட்சிக்குள் கொண்டு போகும் முயற்சி இது.

சீருடை ஒன்றை போட்டுகொண்டு அதிகாரங்களை கையில் எடுக்கும் செயல். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்றால் பொலிஸாரை கடமையில் அமர்த்துங்கள். பொது இடங்களில் இராணுவ தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *