நுவரெலியாவில் தபால் சேவைகள் பாதிப்பு

நுவரெலியா,ஜுலை 04

நுவரெலியா பிரதான நகரில் உள்ள தபால் நிலையம் உட்பட பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் மோசமான நிலை காரணமாக அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்களை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் திறக்க தீர்மானிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் போராட்டம் காரணமாக தபால் விநியோகம், முதியோர் கொடுப்பனவு, முத்திரை பெற்றுக்கொள்ளுதல் போன்ற அனைத்து நடவடிக்கைககளும் ஸ்தம்பித்துள்ளன.
தபால் சேவைகளைப் பெற தபால் நிலையங்களுக்கு வந்தோர் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *