குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் மக்கள் விடுதலை முன்னணி

கொழும்பு,ஜுலை 04

நாட்டினுள் மீண்டும் வன்முறையை ஏற்படுத்தும் விதமாக மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சில செயற்படுவதாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாடு பூராகவும் மக்கள் தமது நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி குரலெழுப்ப தொடங்கியுள்ளனர். தற்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும். ஒன்று இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தர வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் வீடு செல்ல வேண்டும். எனினும் புதிய பாணியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அரசாங்கம் சமூகத்தை அச்சுறுத்த நினைகிறது.

அரசியல் கட்சிகள் மீது பல்வேறு முத்திரைகளை குத்துகிறது. மே 9 ஆம் திகதி சம்பவம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *