கோப் குழுவில் முன்னிலையாகுமாறு லிட்ரோ நிறுவனத்திற்கு அழைப்பு

கொழும்பு,ஜுலை 04

லிட்ரோ நிறுவனம் மற்றும் Litro Gas Terminal ஆகிய நிறுவனங்கள் நாளைய தினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு அரச கணக்குகள் தொடர்பான குழுவில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அரச நிதி தொடர்பான குழுவில் நாளை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *