மின்சாரம் தடைப்பட்டமையால் ரூ.320 மில்லியன் செலவு

கொழும்பு,ஜுலை 04

இலங்கை மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

நீர் மின் நிலையங்களை குறிப்பிட்ட நாளில் இயக்கக்கூடிய நேரத்தில் எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு ரூ.320 மில்லியன் செலவாகியுள்ளதாக PUCSL தெரிவித்துள்ளது.

திட்டமிடப்படாத சுமை குறைப்பு காரணமாக நீர் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக, ஜூன் 9 ஆம் திகதி அதிகாலை 4:30 மணி முதல் காலை 8:45 மணி வரை மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை தவறியதாக, மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு PUCSL எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமலசுரேந்திர, கனியன், பழைய லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, மேல் கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே, உக்குவெல மற்றும் போவதென்ன ஆகிய மின் உற்பத்தி நிலையங்களை ஒதுக்கப்பட்ட காலப்பகுதியில் செயற்படுத்த CEB தவறியுள்ளதாகவும் PUCSL குற்றம் சுமத்தியுள்ளது.

சோஜிட்ஸ் மற்றும் வெஸ்ட்கோஸ்ட் மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டுக்கு ரூ.320 மில்லியன் செலவானது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *