எரிபொருளை பதுக்கிய நபருக்கு நேர்ந்த கதி!

சட்டத்திற்கு முரணாக எரிபொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும், நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி நகரப் பகுதியில் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டத்துக்கு முரணான வகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6000 லீற்றர் டீசல், 210 லீற்றர் பெற்றோல் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரையும், மேற்படி மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் இன்றைய தினம் (04) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பி ஆர் ஸ்மாத் ஜெமில் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டது.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், எரிபொருளுக்காக மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து இவ்வாறு பெருந்தொகையான எரிபொருள் மூன்றாவது நபருக்கு வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மற்றும் முகாமையாளர் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு குறித்த சந்தேகநபர்களை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தயட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *