ரயிலில் மோதி ஒருவர் பலி

செட்டிக்குளம், ஜுலை 05

செட்டிக்குளம், துடலிகுளம் ரயில் கடவையில் ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயில் கடவை ஊடாக கடக்க முற்பட்ட போது கொழும்பில் இருந்து மன்னார் வரை பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *