வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதில் மட்டுப்பாடு

பதுளை, ஜுலை 05

ஊவா மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஊவா மாகாண பிரதான செயலாளரினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஊவா மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களுக்கான தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *