
கொழும்பு, ஜுலை 05
திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய முனையத்தில் இருந்து கொலன்னாவை களஞ்சிய முனையத்திற்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.
லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Manoj Gupta தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்காக குறித்த எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Manoj Gupta குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக 33 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட பாரிய கொள்கலன் வாகனம் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையங்கள் நிறுவனத்தினால்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.